This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, October 28, 2013

உங்கள் காதல் வெற்றி பெறுமா? கை ரேகை ஜோதிட அலசல்



உங்கள் காதல் வெற்றி பெறுமா? நீடிக்குமா? திருமணம் இணையுமா? என்றெல்லாம் அறிய வேண்டும் என்றால் வாருங்கள் ஒரு கை ரேகை ஜோதிட ஆராய்ச்சி செய்யலாம். 

மேலே படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதுதான் காதல் ரேகை. இதற்கு திருமண ரேகை என்றும் ஒரு பெயர் உள்ளது. இந்த படத்தில் காட்டப்பட்டு உள்ளதைப் போல் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள்கூட சிலருக்கு காதல் ரேகையில் இருக்கலாம். 



காதல் ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள்: 

1. எத்தனை ரேகைகள் உள்ளன? 

2. காதல் ரேகையின் நீளம் எவ்வளவு ? 

3. காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ? 

4. காதல் ரேகை இதய ரேகையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அதை இதய ரேகையை நோக்கி நேர் கோடாக இழுக்கின்றபோது சந்திக்கின்ற இடம் எது ? 

5. காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா? 

எந்தக் கையை பார்க்க வேண்டும்? 

நீங்கள் வழக்கமாக எந்த கையை பயன்படுத்தும் பழக்கம் உடையவரோ அந்த கையில்தான் பார்க்க வேண்டும். 

காதல் ரேகைகள் எத்தனை உள்ளன? 

உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை? என்பதை இந்த காதல் ரேகை காட்டி விடும். ஒன்றுக்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்ட காதல் உறவுகளை குறிக்கும். 

காதல் ரேகையின் நீளம் எவ்வளவு ? 

காதல் ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும்? என தெரிந்து கொள்ளலாம். நீளம் குறைவாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது. 

காதல் ரேகையின் அகலம் எவ்வளவு ? 

காதல் ரேகை தடித்து இருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெல்லியதாக இருந்தால் உறவின் ஆழமின்மையை குறிக்கும். 

காதல் ரேகை இதய ரேகையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை சந்திக்கும் இடம் எது? 


காதல் ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது? என்பது முக்கியம். அந்த திரும்பலை அப்படியே நீட்டினால்அது இதய ரேகையை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து எப்போது திருமணம் நடக்கும்? என கணிக்கலாம். 

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா? 

காதல் ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்ல விடயம் அல்ல. இல்லற வாழ்க்கையில் இடம்பெற கூடிய பிரச்சினைளையே குறிக்கும். இவை இல்லற இன்பம் சம்பந்தமான பிரச்சினைகளாகவோ, மன ஒற்றுமை இல்லாமல் இடம்பெற கூடிய சண்டைகளாகவோ இருக்கும்.

 

மேலே உள்ள படத்தில் Heart Line என குறிப்பிடப்பட்டுள்ளது இதய ரேகை ஆகும். சரி வாசகர்களே உங்கள் காதல் ரேகையை வைத்து உங்கள் காதல் வாழ்க்கையை அறிந்து கொள்ளுங்கள்.

Friday, October 18, 2013

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?




ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.    இதனால் நஷ்டம்
நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள் அவர்கள்.
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.

எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!

 …முத்தமிழன்…

Multiple Columns In A Crystal Report


Here’s how to create a sub-report within Crystal Reports containing multiple columns. This information applies to Crystal Reports version 9, but probably also applies to other versions.
Sub-report section expert dialogue
To create a multiple-column report
————————–
1. Open the report you want to format with multiple columns.
2. On the Report menu, click Section Expert.
Tip: Another way to do this is to click the Section Expert button on the Expert Tools toolbar.
3. In the Section Expert, highlight Details, and then select Format with Multiple Columns.
A Layout tab is added to the Section Expert.
4. Click the Layout tab and set the Width you want your column to be.
Keep in mind the width of your paper when deciding your column width. For example, if you have three fields in your Details section, and they take up four inches of space, limit the width of the column to under four and a half inches so that all the field information can be seen.
5. Set the Horizontal and/or Vertical gap you want to maintain between each record in your column.
6. In the Printing Direction area, choose a direction.
7. If the report you’re formatting contains grouping, select Format Groups with multiple column.
8. Click OK.
When you preview the report, you’ll see that the field headers appear only for the first column. To have field headers for the second column, insert a text object.

Wraping field in crystal report

Wraping field in crystal report

07OCT
When you want to display long text in crystal report, and It won’t show you the whole text, you should wrap your text as below:
  1. Open CRYSTAL REPORT
  2. Open The The Open The Report That You Want To Enable Word Wrap Report
  3. Right Click On The Field That You Want To Word Wrap.
  4. Select  Format Object
  5. Then Place A Check In The Box Can Grow and set the maximum line number.
crwrapping