This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, November 26, 2012

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி???


சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி???
Software Engineers மொத்தம் ரெண்டு வகை,
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொட
்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க…. இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல….
Software employee
Software employee
ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCL தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி, தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு….
இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:
*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த time வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல….)…..
*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,
Hi Ramesh,
As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>
Please reply back for any clarifications
Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் 
போடணும்….Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் 
CC வெக்கணும்….
* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது
கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு 
நல்லா 'performance' பண்ணனும்….
*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு….
* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually
இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்
*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(
அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல….)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்….
*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,
Hi All,
Sweets at my desk, Please help yourselves,

அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்….இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.
Employee of software company
Employee of software company
இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.
இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software field முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்
இத்த பொழப்புக்கு! சாகலாம்  

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா? --- உடற்பயிற்சி

 


மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? 

கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். இவ்வாறு குனியும்போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். 

பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்து முறை செய்யலாம். போகப்போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.  

இதேபோல் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களால் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். 

இவ்வாறு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள வேண்டும். இடக் காது முனையை வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி - இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே - உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங் கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும். 

இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும். இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. "ஜாகிங்' எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். 

சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள் அவர்களில் 90 விழுக்காட்டினர் 'ஜாகிங்' செய்பவர்கள் என்பதைக் குறித்துக்கொண்டு பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.  காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், 5 அல்லது 6 கோப்பைத் தண்ணீர் பருகினால், உடனுக்குடனாக வயிறு காலியாகிவிடும். 

இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டுமொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவை நம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாம்.

முட்டைகோஸ்

 

 

எடையைக் குறைக்க எளிய மருந்து 


முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

 

முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் கனமான வெள்ளைத் தண்டை நீக்கி சாப்பிடுவது நல்லது .

 

இது பச்சையாக உண்ண ஏற்ற ஒரு கீரையாகும். இலேசாக வேகவைத்தும் சாப்பிடலாம். இது எளிதில் சீரணமடையும்

 

நீரிழிவு நோய் கட்டுப்பட

 

நீரிழிவு நோயால் அதிக மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தினமும் அவதியுறவைக்கும் நோய்களில் இதுவும் ஒன்று.

 

இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். முட்டைக் கோஸை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி பின் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். இதனை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.

 

இரத்தம் சுத்தமடைய

 

உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைவதால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க ஆரம்பிக்கும். சிறுநீரகம், இதயம், இரத்தக் குழாய் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலு கொடுக்க கோஸ் சிறந்த மருந்தாகும்.

 

வாரத்தில் இருமுறையாவது கோஸ் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் சுத்தமடையும். மேலைநாடுகளில் தினமும் உணவில் கோøஸ சேர்த்துக் கொள்வார்கள்.

 

சீரண சக்தியைத் தூண்ட

 

இன்றைய உணவு முறைகள் எளிதில் சீரண மாகாதவை. இதனால் அசீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுக்கள் சீற்றமாகி உடலில் பல உபாதைகளை உருவாக்குகிறது. முட்டைகோசுக்கு சீரண சக்தி அதிகம் உண்டு. தினமும் உணவில் கோஸ் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறை நீக்கி சீரண சக்தியைத் தூண்டும்.

 

மலச்சிக்கலைப் போக்க

 

முட்டைகோசுடன் சிறிது சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

 

ஜலதோஷம் நீங்க

 

தற்போது கோடைக் காலம் ஆரம்பிக்கும்நேரம். இந்த காலங்களில் பனியின் வேகமும் அதிகம் காணப்படும். இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஜலதோஷம் போன்ற தொல்லைகளை உண்டாக்கும். சில சமயங்களில் சளியுடன் வறட்டு இருமலையும் உண்டாக்கும். இதற்கு முட்டைகோஸை பொரித்தோ, கூட்டு செய்தோ உணவில் அடிக்கடி சேர்த்துவந்தால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 

பித்த நோய்கள் குணமாக

 

உடலில் இனம்புரியாத நோய்கள் ஏற்படுவதற்கு பித்த மாறுபாடே காரணம். உடலில் பித்த நீர் அதிகம் சுரந்து அவை பல இன்னல்களை உண்டாக்கும். முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும்.

 

தாது பலப்பட

 

தாது இழப்பால் சிலர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இவர்கள் தினமும் முட்டைகோஸை வேகவைத்து வடிகட்டிய நீரை காலை மாலை என இருவேளையும் அருந்திவந்தால் தாது பலப்படும்.

 

உடல் இளைக்க

 

சிலர் அதிக உடல் எடையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் முட்டைகோøஸ சூப் செய்து அருந்திவந்தால் பருத்த உடல் இளைக்கும். உடலுக்கு பலம் தரும்.

மூட்டுவலிகளை குணப்படுத்தும் நொச்சி இலைகள்

 

சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இந்தியா முழுவதும் வளரும் தாவரமாகும். புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு

காசநோய் புண்களை குணப்படுத்தும்

இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

மூட்டுவலிக்கு மருந்து

முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது

வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து

மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.