This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, March 6, 2014

பப்பாளிப் பழங்கள்


பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் பப்பாளி. இதில் வைட்ட மின் ஏஉயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். 

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள்

பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டால் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.


ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.


அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.


தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பதுஉடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.


மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின்


மாதுளையின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்


பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.


• . பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறுஇவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.


கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.


பூண்டு சாப்பிட்டீர்களென்றால்உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.


சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்கண் நோய்கள் நெருங்காது.


சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்

Friday, February 28, 2014

ஜிமேட் தேர்வு

ஜிமேட் தேர்வு என்றால் என்ன என தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.....

ஜிமேட் தேர்வின் அம்சங்கள் என்னென்ன?

உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள, 1,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ஜிமேட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

எனவே, இத்தேர்வு தொடர்பான பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மாணவர்களுக்கு இன்றியமையாதது.

இந்த ஜிமேட் தேர்வு எப்படிப்பட்டது?

கிராஜுவேட் மேனேஜ்மெனட் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் ஜிமேட் தேர்வானது, உங்களது படிப்புத் தொடர்பான செயல்பாட்டின், ஒரு செல்லத்தக்க மற்றும் நம்பத்தகுந்த அளவீடாகும். நீங்கள், ஜிமேட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டால், வகுப்பறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். இத்தேர்வில், Analytical writing assessment, Integrated reasoning, Quantitative and Verbal போன்ற 4 பகுதிகள் உள்ளன. இத்தேர்வுக்காக, மொத்தம் 3.5 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், நீங்கள் திட்டமிடும்போது, மொத்தம் 4 மணி நேரங்களுக்கு திட்டமிட வேண்டும். ஏனெனில், இடைவெளி நேரங்களையும் சேர்த்து, மொத்தம் 4 மணிநேரங்கள்.

ஜிமேட் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது?

இத்தேர்வு, முழுவதுமாக, ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகிறது. இத்தேர்வின், quantitatvie மற்றும் verbal பகுதிகளானது, computer-adaptive தொடர்பானவை. நீங்கள் முந்தைய கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்தீர்கள் என்பதை வைத்து, இப்பகுதியில், உங்களுக்கான கேள்விகள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இதில், நீங்கள் அதிகளவில், சரியான பதில்கள் கொடுக்க கொடுக்க, தேர்வும் கடினமாகிக் கொண்டே செல்லும்(உதாரணம்: video game).

கேள்விகளின் கடினத்தன்மை மற்றும் நீங்கள் அளித்த சரியான பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும், தேர்வுக்கான ஒரு குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், உங்களின் திறனுக்கேற்ப, தேர்வு நேரத்தை அதிகரித்தோ அல்லது சுருக்கியோ அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமேட் தேர்வு முறை என்ன?

இத்தேர்வில், மொத்தம் 4 பகுதிகள் உள்ளன. அவை,

ANALYTICAL WRITING ASSESSMENT(AWA)

இப்பகுதியில், 30 நிமிடங்களுக்கான கட்டுரை, விவாதத்தை பகுப்பாய்வு செய்தல் இடம் பெற்றிருக்கும். சிக்கலான விஷயங்களை சிந்தித்தல் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் ஆகியவை, இப்பிரிவில் மதிப்பிடப்படும்.

INTEGRATED REASONING(IR)

மொத்தம் 30 நிமிடங்களைக் கொண்ட இப்பகுதியில், 12 கேள்விகள் கேட்கப்படும். வெவ்வேறான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் உங்களின் திறன், இதன்மூலம் சோதிக்கப்படும்.

QUANTITATIVE SECTIONS

மொத்தம் 75 நிமிட நேரத்தைக் கொண்ட இப்பகுதியில், 37 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கிராபிக் தரவுகளை விளக்குதல் மற்றும் குவான்டிடேடிவ் சிக்கல்களை தீர்த்தல் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கும்.

VERBAL SECTION

41 கேள்விகள் இடம்பெற்ற இப்பகுதியானது, 75 நிமிடங்களைக் கொண்டது. ஆங்கில வார்த்தை வளம்(vocabulary), பாடங்களைப் பகுப்பாய்வு செய்தல், சரியான முறையில் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட திறன்கள், இப்பகுதியில் சோதிக்கப்படும்.

ஜிமேட் மதிப்பெண் அளவீடுகள் எவை?

ஜிமேட் தேர்வின் மொத்த மதிப்பெண் 200 – 800 என்ற மதிப்பீட்டில் அறிவிக்கப்படுகிறது மற்றும் Quantitative, Verbal பிரிவுகளில், தேர்வெழுதுபவரின் செயல்பாட்டின் அடிப்படையில் இது அமைகிறது. மொத்த மதிப்பெண்கள் தவிர, 4 பிரிவுகளுக்கும், தனித்தனி மதிப்பெண்களும் உண்டு.

INTEGRATED REASONING(IR) 
scored on a scale of 1-8

VERBAL SECTION – scored on a scale of 0-60

QUANTITATIVE SECTION – scored on a scale of 0-60

ANALYTICAL WRITING ASSESSMENT – scored on a scale of 0-6

AWA மற்றும் IR பிரிவுகள், தனித்தனியாக மதிப்பெண்கள் இடப்படும். அவை, மொத்த மதிப்பெண் கணக்கில் வராது. மேலும், தேர்வு முடிந்தவுடன், தேர்வு மையங்களில் கிடைக்கும் அதிகாரப்பூர்வமற்ற மதிப்பெண் பட்டியல்களில் அவை இணைக்கப்படாது. அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிந்த 20 நாட்களில் கிடைக்கும். GMAT மதிப்பெண்கள், 5 வருடங்களுக்கு செல்லத்தக்கவை.

ஜிமேட் தேர்வுக்கு தயாராதல் எப்படி?

www.mba.com/gmatprep என்ற இணையதளத்தில், ஜிமேட் தேர்வுக்கு தயாராதலுக்கு உதவும் இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, www.mba.com/store என்ற வலைதளத்தில், ஜிமேட் தேர்வுக்கான பலவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

எந்தெந்த நாடுகள் ஜிமேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன?

உலகம் முழுவதும், சுமார் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ஜிமேட் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, அவற்றில், இந்தியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்பெய்ன், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, கனடா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கில மொழித்தேர்வைப் பற்றி கூறவும்

நீங்கள் எந்த பல்கலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, அதன் இணையப் பக்கத்திற்கு சென்று, அது நடத்தும் ஆங்கில மொழித்தேர்வைப் பற்றி அறிய வேண்டும்.

ஜிமேட் தேர்வை எத்தனை முறை எழுதலாம்?

உலகம் முழுவதுமுள்ள தேர்வு மையங்களில், ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில் ஜிமேட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாதத்தில், அதிகபட்சம் 1 முறையும், ஒரு ஆண்டில், அதிகபட்சம் 5 முறையும், இத்தேர்வை எழுதலாம். மேலும், நீங்கள் தேர்வெழுத விரும்பும் குறிப்பிட்ட மையத்தின், தேர்வுக்கான கால அட்டவணை திட்டத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஜிமேட் தேர்வை எழுத, யாரெல்லாம் தகுதியானவர்கள்?

குறைந்தபட்சம் 13 வயது ஆகியிருந்தால், இத்தேர்வை எழுதலாம். அதேசமயம், 18 வயதுக்கு குறைந்தவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்திட்ட, எழுதப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜிமேட் தேர்வெழுத எவ்வளவு செலவாகும்?

உலகளவில், இத்தேர்வெழுத, 250 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன. சில நாடுகளில், இத்தேர்வு நடத்தப்படுவதற்கு வரியும் விதிக்கப்படுகிறது. ஜிமேட் தேர்வுத் தேதியை மாற்றியமைக்கும் அல்லது ரத்து செய்யும் தேர்வர்கள், கூடுதலாக செலவுசெய்ய வேண்டியிருக்கலாம். எனவே, இது விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

குறிப்புகள்

இந்தியாவின் 17 நகரங்களில், 18 மையங்களில், ஆண்டு முழுவதும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் ஏறக்குறைய 80 வணிகப் பள்ளிகளால் வழங்கப்படும் 150க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ஜிமேட் தேர்வு மதிப்பெண்கள் செல்லுபடியாகின்றன.

Sunday, February 23, 2014

பிற மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்ப‍டி? பார்ப்பது எப்படி?

பிற மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்ப‍டி? பார்ப்பது எப்படி?

இணையத்தில் இப்போ தெல்லாம் தெலுங்கு, ம லையாளம், ஹிந்திபோ ன்ற வேற்று மொழிப் பட ங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழு து போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும்போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில்

தெரியும்.மொழிபுரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். 

ஆனால் நிறைய படங்கள் டொ ரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப்படங்கள் எடுக்கு ம் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப் படங்களுக்கு சப்-டைட்டில்க ளை சேகரித்து வைத்திருக்கிறா ர்கள்.

1. http://subscene.com/
2. http://www.opensubtitles.org/
3. http://www.moviesubtitles.org/

சப்-டைட்டில்களை படத்தில் பார்க்க

பொதுவாக சப்-டைட்டில் கோப்புகள் .SRT or .SUB என்ற பார் மேட்டில் முடியும். உங்களுக்குத் தேவையான சப்-டைட்டி லை டவுன்லோடு செய்து விட்டு அந்த படத்தின் பெயரை சப்-டைட்டிலுக்கும் Re-name செய்து விட்டால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கும் போது தானாக வந்து விடும்.

Example:Movie Name–Dookudu.avi, Sub-title Name–Dookudu.srt

இல்லாவிட்டால் VLC மீடியா ப்ளேயரில் படத்தினைத் திறந்து விட்டு மெனுவில் Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும்.

  

 

இதர சில இணையதளங்கள்

 

http://www.subtitlesbox.com/

 

http://www.anysubs.com/

http://www.divxtitles.com/

http://www.divxsubtitles.net/ 

http://www.mysubtitles.com/

http://www.all4divx.com/

http://www.allsubs.org/

http://subtitles.com.br/

http://www.subtitleonline.com/

http://www.moviesubtitles.net/

http://www.fsubs.com/

http://www.bestsubtitles.net/

http://getmesubs.com/

http://www.subtitles.cz/en/

http://www.5sub.com/Default.aspx

http://www.subdivx.com/

 

 

Friday, February 14, 2014

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை
ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்

ஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க

ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட் செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் ஈ-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.

முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.


அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்.....!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

1. Add Watermarks


குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.

2. Video Converter

நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க

Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.

3. Free Online Radio


VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும்.

இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. RIGHT TO INFORMATION ACT-2005



தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005.

அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
நோக்கம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4.
அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல்கள்
தகவல் என்றால் என்ன? தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே "தகவல்" என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3.
அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5.
சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6.
தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல் பெறுவதன் நன்மைகள்
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
மாநிலத் தகவல் ஆணையம்
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2,தியாகராய சாலை,
ஆலையம்மன் கோயில் அருகில்,
,தேனாம்பேட்டை,
சென்னை- 18.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
மாதிரி விண்ணப்பப் படிவங்கள்




நாம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால்
கீழ்கண்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்.